.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, June 09, 2004

மாறட்டும் மனோபாவம் !

நம் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதெல்லாம் எது ? நமது மனோபாவம்தான்.
சில சமயங்களில் ஒரே விதமான செயல்களில் சூழ்நிலைக் கைதிகளாக இருந்து விடுகிறோம். இச்சூழலிலிருந்து விடுபட என்ன செய்யலாம் ?விவேகமாக வித்தியாசமாக வரும் விசயங்களை மனதில் அசை போடலாம்; அதோடு இயைந்து வினையாற்றலாம்.

மனோபாவம் ஆரோக்கியமடைய வேண்டுமென்றால், புது இரத்தம் போல், புதிய எண்ணங்கள் நம் மனோபாவத்துக்குள் வெள்ளமாய்ப் பாய்ந்து நம் சிந்தனையை வளப்படுத்த வகைசெய்தல் வேண்டும்.

நற்சிந்தனைகள் விளைந்தால்தான் அரிய செயல்கள் கிடைக்கும். ஏனெனில், எந்தச் சாதனைக்கும் ஆணிவேராகவும் மூலக்கருவாகவும் இருப்பது உயர்ந்த சிந்தனைதான் !

வாழ்த்துக்கள் அன்பர்களே..

பி.கு: அருவத்தில் ஆரம்பித்ததுதான் எமது முந்தைய வலைப்பதிவுகள். அருவுருவத்திற்கு வந்திருக்கின்றேன் இப்போது.

1 Comments:

At Wed Jun 09, 09:47:00 PM 2004, Blogger Vasudevan Letchumanan said...

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் !

 

Post a Comment

<< Home