.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, June 11, 2004

வாடாத பூ - டாக்டர். மு.வா

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசன் அவர்கள் தமிழ்க்கூறு நல்லுலகின் எழுத்து வேந்தர். நற்றமிழ் நூல்களை இயற்றி சாதனை படைத்தவர். அவர் எழுதிய முதல் நூல் எதைப் பற்றியது என்று அறிவீர்களா ? இன்று அறிந்தேன்; வாசகர்களுக்கு..
வழங்க விழைந்தேன். ( குமுதம் வழி யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வலைப்பூ எங்கும் )
'குழந்தைப் பாட்டுக்கள்' என்பதே அவர் எழுதிய ( 1939-இல் ) முதல் நூல். அதில் 'வாடாத பூ' என்ற பாடலை எப்படி இயற்றியுள்ளார் என்று பாருங்கள் :


ரோஜாப்பூ வாடிவிடும்
சண்பகப் பூ வாடிவிடும்
மல்லிகைப் பூ வாடிவிடும்
முல்லைப் பூ வாடிவிடும்
வடாத பூ எதுவோ ?
வளருகின்ற இடம் எதுவோ ?
வாடாத பூ அறிந்தேன்
வளருகின்ற இடம் அறிந்தேன்
வாடாத பூ படிப்பூ !
வளரும் இடம் பள்ளிக்கூடம் !


பி.கு : அதில் ஈற்றடி இரண்டும் என் மனதில் இப்படியும் பாட வைத்தது....
வாடாத பூ வலைப்பூ
வளரும் இடம் வலைதளக்கூடம் ... என்று!



1 Comments:

At Mon Oct 25, 07:23:00 PM 2004, Anonymous Anonymous said...

என்னை மிகவும் கவர்ந்தது..வாடாதபூ!

திருமதி. சிவகாந்தி தனபாலன் ( சாஆ தமிழ்ப்பள்ளி)

 

Post a Comment

<< Home