.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, June 12, 2004

சிரிப்பூ இதயத்தின் பூரிப்பு

இப்போதெல்லாம் மருத்துவ மேதைகள் நோயாளிகளை வாய்விட்டுச் சிரிக்கச் சொல்கின்றனர். நன்றாகச் சிரித்தால் இதயம் வலுவடையும் என்கிறார்கள்.

சிரிப்பினால் பல நன்மைகள் உண்டு. நம்மைப் பற்றி நாமே தெரிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும். ஒருவருடைய சிரிப்பை வைத்தே அவருடைய குணங்களைக் கூற முடியும் என்பது மனோதத்துவ அறிஞர்களின் கருத்து
.( சரி, மருந்துக்கு ஒன்று )

ஒரு சுடுகாட்டுலே, ஒரு கல்லறைக்கு மேலே, கால்மேலே கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தான் ஒருத்தன். அந்த வழியா போன ஒருத்தர் அவனைப் பார்த்தார்; கேட்டார்: "ஏம்பா இப்படி பேய் பிசாசு நடமாடுற இந்த மயானத்துல கல்லறைக்கு மேலே உட்கார்ந்திருக்கே ?"

"எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருக்கிறது....ஒரே புழுக்கமா இருந்தது....அதுதான் காத்து வாங்கலாம்னு வெளியே வந்தேன்" அப்படினுச்சாம் அந்த ஆசாமி!


பின் குறிப்பு : உங்கள் சிரிப்பு வலைப்பூவுக்குள் ஒரு மத்தாப்பு ( அப்படியொன்றும் சிரிப்பு வரவில்லை என்று நீங்கள் மனோதத்துவ மருத்துவரையெல்லாம் கண்டு பின் அவர் உங்களைப் பார்த்து சிரித்தாலும் பாதகமில்லை. ஏனெனில், சிரிப்பதும், சிரிப்பூட்டுவதும் நல்ல செயல்களே!)

0 Comments:

Post a Comment

<< Home