.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, June 15, 2004

எந்த வீட்டுக்குப் போவது ?

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. முல்லாவில் வழக்கறிஞர், "நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார்.முலாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே அமைதியாக இருந்த்தால்ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, "சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,"என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக முடிந்த மகிழ்ச்சியில் " நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு நான் போவது ?" என்று கேட்டார்.

பி.கு : ஒரு வார்த்தை போதும், நம் மனதில் என்ன இருக்கிறதென்று அது காட்டிக் கொடுத்துவிடும்.

0 Comments:

Post a Comment

<< Home