.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, October 15, 2004

உளவியல்,பயிற்றியல் துறைகளில் புதிய செல்நெறிகள் - பகுதி 4

கருத்தாக்க கற்றல் அணுகுமுறைகள்
1.ஆசிரியர் கேள்விகளையும் பிரச்சினைகளையும் முன்வைத்தல். மாணவர்களே சுயமாக விடை காண வழிகாட்டுதல்.
2. மாணவர்களே கேள்விகளை உருவாக்குதல்.
3. குழுவாகச் செயல்படுதல். சகாக்களைத் துணையாகக் கொள்ளுதல்.
4. முன் அனுபவம், முன் அறிவோடு புதிய கருத்துகளை உருவாக்குதல்.
5. உயர்நிலை சிந்தனைத் திறனைப் பயன்படுத்துதல்.
புரிந்து கொள்ளுதலை எவ்வாறு கற்பிக்கலாம் ?
விளக்கம் அளித்தல், பயிற்சி செய்வித்தல், தேர்வு நடத்துதல் மட்டும் புரிந்து கொள்ளுதலைக் கற்பிக்கும் அணுகு முறை அல்ல. புரிந்து கொள்ளுதலைக் கற்பிக்க தேவைப்படும் ஆறு முதன்மைக் கூறுகள்:-
1. சிந்தனைத் திறனை மையமாகக் கொண்ட ஒரு நீண்ட கால கற்றல் முறையை உருவாக்குதல்.
2. ஆண்டு முழுவதும் மதிப்பீடு செய்யும் முறையை அமல்படுத்துதல்.
3. வளமான சான்றுகளுடன் கற்றலை ஆதரித்தல்.
4. நடைபெறும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கவனத்தில் கொள்ளுதல்.
5. பயிலும் துறையில் மாணவர்களை முழு ஈடுபாடடையச் செய்தல்.
6. கருத்துப் பெயர்ப்புகளுக்காகக் கற்பித்தல்.
பரிந்துரைகள் :-
1. பள்ளியிலும் பள்ளிக்குப் புறத்தேயும் தம் சகாக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்குதல்.
2.ஆசிரியர் மேற்கொள்ளும் செய்முறையை மேம்படுத்த தலைமையாசிரியரின் ஆலோசனையையும் ஆதரவையும் பெறுதல்.
3. ஆசிரியர் கையாளும் புதிய அணுகுமுறைகளைப் பற்றித் தலைமையாசிரியரைத் தவிர்த்துப் பிறர் கருத்துகூறுதல்.
4. ஆதரவு பெறுவதற்கும் புதிய கருத்துகளை உருவாக்குவதற்கும் ஆசிரியர்கள் சமூகத்தின் அங்கமாக இருத்தல்.
5. நடைபெறும் மாற்றங்களுக்கு ஏற்ப கற்பித்தல் அணுகுமுறைகளைப் பரிசோதனை செய்துபார்க்க வாய்ப்பு வழங்குதல்.
6. இவ்வாறு செய்தால் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைப் பற்றிய புதிய கருத்துகள் உருவாகலாம். அவருடைய பங்களிப்பில் மாற்றம் ஏற்படலாம்.
7. பங்களிப்பிலும் செயல்பாடுகளிலும் ஏற்படும் மாற்றங்களில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள போதுமான அவகாசம் அளித்தல்.
8. ஆசிரியர் பணித்த மேம்பாட்டைக் கற்றலின் மையப் பகுதியாக நெறிபடுத்துதல்.
9. பணித்திற மேம்பாடு நீண்ட கால அடிப்படையில் செயலாக்கம் பெற அரசும் மக்களும் ஆதரவு வழங்குதல்.
முடிவுரை
ஆசிரியர்கள், சமுதாயத்திடமிருந்து பல்வகையான சவால்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் எதிர்நோக்குகிறார்கள். ஆசிரியர் பயிற்சியில் அறிந்த அணுகுமுறைகளுக்கு மாறாக புதிய முறையில் கற்பிக்க அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். உயர்நிலை சிந்தனைத் திறனை கற்பித்தலில் இணைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் கருத்தாக்க முறையைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ளுதலைக் கற்பிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகளையும் சவால்களையும் ஆசிரியர்கள் சந்தித்தே ஆகவேண்டும். ஆசிரியர்கள் தொழிலுக்குத் தேவையான அறிவையும் திறன்களையும் நிறைவாகப் பெற வேண்டும். சாதாரண அறிவையும் ஆற்றலையும் பெற்ற ஒருவராக அல்லாமல் சிறப்புத்தன்மை வாய்ந்த ஒருவராக அவர்கள் திகழ வேண்டும்.


குறிப்பு: கட்டுரையாளர்..முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள்.



1 Comments:

At Mon Jun 13, 06:13:00 PM 2005, Blogger NambikkaiRAMA said...

அன்பரே! உங்களது பதிவுகள் சிறப்பாக உள்ளது..உங்கள் பதிவுகளை "நம்பிக்கை" என்ற கூகுள் குழுமத்தில் இடுங்கள்.நண்பர்கள் பயன் அடைவார்கள்.
அதன் சுட்டி இதோ..
http://groups-beta.google.com/group/nambikkai

 

Post a Comment

<< Home