.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, August 16, 2004

மாசய் - தமிழ்ப்பள்ளியில் 'வலைப்பூ' அமைக்கும் பயிலரங்கு

இடம் : மாசாய் தமிழ்ப்பள்ளி
நாள்: 13.08.2004
நிகழ்வு :தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் வலைப்பூ அமைக்கும் வழிகாட்டிக் கருத்தரங்கு.
ஏற்பாடு : தெமெங்கொங் இபுறாஹீம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ( MPTI ) - விரிவுரையாளர்கள்.
( i) திருமிகு. சேதுபதி (ii) திருமிகு. சண்முகம் (iii) திருமிகு. ஜேசுடாஸ்
கனிந்த வணக்கம். முதலில், ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் - கல்லூரி விரிவுரையாளர் திருமிகு. சேதுபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய முயற்சியால் எமக்கு இப்பயிலரங்கை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தது. 'தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் வலைப்பூவும் மின் தமிழும்' எனும் தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது. இது முதல் முயற்சி; சிறியஅளவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜொகூர் வட்டாரத்தைச் சார்ந்த 26தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்;பயனடைந்தார்கள்.
அவர்களுக்கு தமிழில்'யூனிகோட்' முறையில் எளிய வழியில் weblog -வலைப்பூ அமைப்பது பற்றி பயிலரங்கு நடைபெற்றது.
கலந்து கொண்ட ஆசிரியர்கள் செய்முறை பயிற்சியிலும் ஈடுபட்டனர்; பலர் வெற்றிகரமாக முதல் தமிழ் வலைப்பதிவு செய்தனர்.
நல்லதொரு துவக்கம். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இதன்வழி தங்களை தகவல் தொழில் நுட்பத் துறையில் இன்னும் ஈடுபாடு காட்ட ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகின்றேன்.
அன்புடன்,
எல்.ஏ. வாசுதேவன்,
பல்லூடகத் தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்.
பி.கு : கலந்து பயனடைந்த ஆசிரியர்கள் தங்கள் வலைப்பூவை எவ்வாறு கற்றல் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பணி தொடர்பான சிந்தனைக்களமாக்குவது பற்றி ஆழ்ந்து யோசிக்குமாறு அன்புடன் விழைகின்றேன்.

1 Comments:

At Mon Nov 08, 12:27:00 PM 2004, Anonymous Anonymous said...

சபாஷ்! வாழ்த்துக்கள்!
கலைவாணி சுப்ரமணியம்
பாலோ தமிழ்ப்பள்ளி

 

Post a Comment

<< Home