.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, July 11, 2004

தேசிய கல்வித் தத்துவத்தின் அடிப்படை நோக்கம் ?

இரசாக் கல்வி அறிக்கையும்(1956) இரஹமான் தாலிப் கல்வி அறிக்கையும்(1960) மலேசிய நாட்டு தேசிய கல்வித் தத்துவம் - கொள்கை உருப்பெறுவதற்கு அடித்தளமாக விளங்கின. இவ்விரு அறிக்கைகளைத் தொடர்ந்தே 1961-ஆம் ஆண்டில் கல்விச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மூன்று அரசு ஆவணங்களும் நாட்டு மக்களின் ஒற்றுமையை மையப்பொருளாகத் தாங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பல இன மக்கள் வாழும் மலேசிய நாட்டில் "ஒற்றுமையே" தேசியத் தன்மை பெறுவதற்கும் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை அடைவதற்கும் நல்வழி வகுக்கிறது. சுருங்கக் கூறின், நாட்டில் ஒற்றுமையைத் தொடர்ந்து நிலைநாட்ட 'கல்வித்துறை' ஒரு மறைமுக ஊடகமாகச் செயல்பட்டு வருகின்றது என்றாலும் மிகையாகாது.

"கே.பி.எஸ்.ஆர்" பாடத்திட்டம் மலேசிய மக்களின் விருப்பங்களையும், இலட்சியங்களையும், நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த அம்சங்களையும் உண்மையிலேயே பிரதிபலிக்கின்றதா என்பதை அறிய மிகக் கவனமாக 1982-ஆம் ஆண்டு முதல் மலேசிய கல்வி அமைச்சு ஒரு திட்டம் வகுத்தது. அமைச்சு அமைத்த அந்த சீராய்வுக் குழுவில் கல்வியமைச்சின் வல்லுநர்களையும் அரசு சார்பற்ற கல்வி நிபுணர்களையும் ஒன்று சேர்த்து தொலை நோக்கு திட்டம் வகுத்தது. அவர்களின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக "தேசிய கல்வித் தத்துவம்" உருவாக்கப்பட்டது.

இத்தத்துவத்தின் நோக்கமானது, கல்வியினூடே "உடல்,மனம்,ஆத்ம,அறிவு" கொண்ட ஒரு சிறந்த, முழுமையான மனிதனை உருவாக்குவதையே வலியுறுத்துகிறது என்பது வெள்ளிடைமலை.

0 Comments:

Post a Comment

<< Home