.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, July 15, 2004

எண்ணங்களும் நம் குணங்களும் !

" மனிதன் தன் இதயத்தின் ஆழத்தில் எந்த எண்ணத்தைக் கொண்டிருக்கின்றானோ அதே போல் ஆவான் " என்பது முதுமொழி. அது முழு மனித வாழ்வையும் தழுவி நிற்கிறது.அதைவிட, வாழ்வின் எல்லா அம்சங்களையும் தொட்டு, அவன் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிலைமைக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் காரணமாகிறது. ஒரு மனிதன் அவன் எண்ணுவதைப் போல ஆகிறான் என்பது வார்த்தைக்கு வார்த்தை உண்மை;அவனது எண்ணங்களின் மொத்த வடிவம்தான் அவனது குணம்.

ஒரு சிறு செடி, விதையில்லாமல் எப்படி துளிர்ந்து எழுவதில்லையோ அதுபோல மனிதனது ஒவ்வொரு செயலும் அவனது எண்ணம் என்கிற மறைந்து கிடக்கும் விதைகளில்லாமல் கிளம்புவதில்லை. அந்த எண்ண விதைகள் இல்லாமல் செயல் நேர்ந்திருக்க முடியாது.

திடீரென்று -- தானாக விளைந்த செயல் என்று சொல்லும் எல்லா செயல்களுக்கும் இது
பொருந்தும். திட்டமிடாது நேர்ந்த செயலும், நன்கு திட்டமிட்டு செயல்பட்ட காரியமும் எண்ண விதைகளிலிருந்து தான் வந்திருக்கின்றன.

செயல் எண்ணங்களின் மலர். இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆகவே, தான் வளர்த்த
தோட்டத்திலிருந்து தான், இனிப்பான அல்லது கசப்பான கனிகளை அவன் அறுவடை செய்கிறான்."

பி.கு : "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" எனும் நூலிலிந்து.....மூலம் - ஜேம்ஸ் ஆலன்; தமிழாக்கம் --> டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.

0 Comments:

Post a Comment

<< Home