உயர்ந்த எண்ணங்கள்!
ஒவ்வொரு நாள் காலையில் சூரியன் உதிக்கும் திசை நோக்கி உங்களுக்குப் பிடித்த உயர்ந்த எண்ணங்களை மானசீகமாய் வெளியிடுங்கள்....பிரார்த்தனையாக!
"மிக மிக உயர்ந்த எண்ணங்களே வருக ! எவ்வுயிரும் இன்புற்று இருக்க; எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக; எவ்வுயிரும் ஆனந்தம் பெறுக; எத்திசை உயிர்களும் இவற்றைப் பெறுக !"....இப்படி மனப்பூர்வமாக உள்ளிருந்து வெளிப்படட்டும்!
பிரார்த்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து பிரபஞ்சத்தைத் துணைக்கு அழைக்கும் யுக்திகளில் இதுவும் ஒன்று.
தன்னலம் கருதாமல் செய்து பாருங்கள்; பலன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைத்தால் அது உங்களுக்கும் கிடைத்த மாதிரிதானே..! கொடுத்தால் பெறலாம்!
பி.கு : 'கொடுத்து வைத்தவர்கள்' என்ற சொற்றொடரை பிறரைப் பார்த்து சொல்வது வழக்கில் உள்ளதே.....கொஞ்சம் யோசித்தால் தெரியவரும் அவர்கள் எதை? எப்போது? கொடுத்தார்கள் என்று.
1 Comments:
உயர்ந்த எண்ணங்கள் மிக உயரத்தில் இருபதால்தான் எட்ட முடிவதில்லை நம்மால்.
Post a Comment
<< Home