.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, June 23, 2004

உயர்ந்த எண்ணங்கள்!

ஒவ்வொரு நாள் காலையில் சூரியன் உதிக்கும் திசை நோக்கி உங்களுக்குப் பிடித்த உயர்ந்த எண்ணங்களை மானசீகமாய் வெளியிடுங்கள்....பிரார்த்தனையாக!

"மிக மிக உயர்ந்த எண்ணங்களே வருக ! எவ்வுயிரும் இன்புற்று இருக்க; எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக; எவ்வுயிரும் ஆனந்தம் பெறுக; எத்திசை உயிர்களும் இவற்றைப் பெறுக !"....இப்படி மனப்பூர்வமாக உள்ளிருந்து வெளிப்படட்டும்!

பிரார்த்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து பிரபஞ்சத்தைத் துணைக்கு அழைக்கும் யுக்திகளில் இதுவும் ஒன்று.

தன்னலம் கருதாமல் செய்து பாருங்கள்; பலன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைத்தால் அது உங்களுக்கும் கிடைத்த மாதிரிதானே..! கொடுத்தால் பெறலாம்!

பி.கு : 'கொடுத்து வைத்தவர்கள்' என்ற சொற்றொடரை பிறரைப் பார்த்து சொல்வது வழக்கில் உள்ளதே.....கொஞ்சம் யோசித்தால் தெரியவரும் அவர்கள் எதை? எப்போது? கொடுத்தார்கள் என்று.

1 Comments:

At Mon Jul 11, 06:06:00 AM 2005, Blogger Unknown said...

உயர்ந்த எண்ணங்கள் மிக உயரத்தில் இருபதால்தான் எட்ட முடிவதில்லை நம்மால்.

 

Post a Comment

<< Home