.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, November 16, 2004

ஆசிரியர் தரம்

தரமான ஆசிரியர்களின் பண்புகள் என்ன ?
பெரும்பாலும் ஆசிரியர் தரம் என்றவுடனேயே ஆசிரியர்களின் கல்வியறிவு அல்லது அவர்கள் பெற்றுள்ள சான்றிதழ்களின் அடிப்படையிலேயே நாம் இதை நோக்குவது இயல்பாகி விட்டது. எனினும், ஆசிரியர்களின் கல்வியறிவை மட்டும் வைத்து அவர்களின் தரத்தை நிர்ணயிப்பது பொருத்தமில்லாத ஒன்றாகும்.
ஆசிரியர் தரம் என்பது, அவர்கள் பெற்றுள்ள கல்வியறிவு, பணித்திறப் பயிற்சி, பணி தொடர்பான சிறப்புப் பயிற்சி, மனப்பான்மை, பொறுப்பேற்கும் தன்மை, முனைப்பு, பணியின் தரம், நோக்கு நிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஓர் ஆசிரியர் தரமான கற்றல் கற்பித்தலை வழங்க முடியும். ஒருவர் உயர்ந்த கல்வியறிவைப் பெற்றிருந்தாலும், அவருக்கு ஒரு நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய மனப்பான்மை இல்லையெனில், அவர் தம் பணியினை சிறப்பாகச் செய்ய மாட்டார். இதனால் அங்கு தரமான கற்றல் கற்பித்தல் நடைபெற வழியில்லாமல் போய்விடும்.
இப்பண்புகளை எப்போதும் எப்போதும் பேணிக் காப்பது ஒரு ஆசிரியரின் கடமையாகும். இதில் எவையேனும் ஒரு பண்பிலேயோ அல்லது பல பண்புகளிலிலேயோ ஒருவர் குறையுடையவராக இருந்தால், அதில் ஏற்றம் காண முயற்சிக்க வேண்டும். அதுவே நல்லாசிரியரின் பண்பாகும்.
ஆசிரியர்கள் எப்போது புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்வதை நிறுத்துகின்றார்களோ, அக்கணமே அவர்கள் ஆசிரியர் தொழிலைச் செய்யும் தகுதியை இழக்கின்றனர். ' When teachers stop being learner, they should immediately stop being teachers' என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
( 1992-இல் கோலாலம்புரில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் ம.இ.காவின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2020 இலக்கை நோக்கித் தமிழ்ப்பள்ளிகள்: ஒரு தேசியக் கருத்தரங்கில் படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி- படைப்பு : முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள், UPSI பல்கலைக்கழகம் )
குறிப்பு : தற்போது முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் UNESCO-வின் அனைத்துலக கலை கலாச்சாரக் குழுவின் கல்வியாளர்களுக்கான
செயற்குழுவின் உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார் என்பது மலேசிய இந்தியர்களுக்குப் பெருமையளிக்கும் விசயமாகும். முனைவர் என்.எஸ் அவர்களுக்கு மலேசியத் தமிழாசிரியர்களின் சார்பில் மானமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். )

0 Comments:

Post a Comment

<< Home