.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, January 02, 2005

2005 - புதிய கல்வி ஆண்டு பிறக்கிறது.

2 ஜனவரி, 2005

நாட்டிலுள்ள 525 தமிழ்ப்பள்ளிகள் நாளை நாளை புதிய கல்விப் பருவம் துவங்குகிறது. பெரும்பாலான பள்ளிகளில் இன்றே புதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கக் கூட்டம் பள்ளி நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டது.


ஜோகூரில், குளுவாங் தமிழ்ப்பள்ளியில் வழக்கம் போல் "வித்யாரம்பம்" - புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனையுடன் நடைபெற்றது.

"இவ்வாண்டு குளுவாங் தமிழ்ப்பள்ளியில் 150 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்" என்று பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு.ச.மணிவண்ணன் அவர்கள் தெரிவித்தார்.

"காலை 8.00 மணியளவில் பதிவு; 8.30 க்கு 'வித்யாரம்பம்' சமய சடங்குகளுடன் ஆரம்பம். தலைமையாசிரியர் 'தங்கத் தட்டில்', மஞ்சள் அரிசியில் அகரம் எழுத அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் தங்கள் பெற்றோர்களின் துணையுடன் 'அகரம்' எழுதி கல்வி வித்தையை ஆரம்பித்தனர்" என்று ஆசிரியர் திரு.ச.மணிவண்ணன் அவர்கள் 'விவேகம்' வலைப்பூவுக்காக தொலைபேசி வழி தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் தொடர்ந்து பஜனைப் பாடல்களும் பாடப்பட்டது. குளுவாங் ரிவர் டெக்ஸ் குருக்கள் திரு தாமோதரன் அவர்களின் தலைமையில் தெய்வீகம் கமழ பள்ளி மண்டபத்தில் 2005- ஆண்டின் புதிய கல்விப் பருவம் துவக்கம் கண்டது.

அதனைத் தொடர்ந்து, புதிய மாணவர்களுக்குக் குழு விளையாட்டு, பாடல் மற்றும் ஆசிரியர்களுடன் அறிமுகம் - என்ற அங்கமும் இருந்தது. இறுதியாக,
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ( திரு. சுப்ரமணியம்) , பள்ளி தலைமை ஆசிரியர்( திரு. சண்முகம்), கல்விப் பிரிவு துணைத் தலைமையாசிரியர் ஆகியோரின் விளக்க உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு கண்டது. இந்நிகழ்வில் மாணவர்கள் ( 120 ), ஆசிரியர்கள் ( 60 ) மற்றும் பெற்றோர் ( சுமார் 150 ) பேர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

தகவல் : ஆசிரியர் திரு.ச. மணிவண்ணன்(குளுவாங் தமிழ்ப்பள்ளி)

இது போன்று நாளை முதலாம் ஆண்டில் காலடி வைக்கும் ( 525 பள்ளிகள்) அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து கூறி தமிழ்த்தாயின் அருளாசி பெற்று கல்வி கேள்விகளில் சிறந்திட இறைஞ்சுகிறேன். அதே வேளையில் புதிதாக ஆசிரியர் பணிக்கு வந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து தமிழாசிரியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்,
எல்.ஏ. வாசுதேவன்,
USM, Penang.

0 Comments:

Post a Comment

<< Home