.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, May 17, 2005

ஆசிரியர் தினம்


நேற்றுதான் பினாங்கிலிருந்து குளுவாங்கிற்கு வந்தேன். பள்ளிக்குச் செல்ல வேண்டும்; இன்று ஆசிரியர் தினம்! கைத்தொலை பேசியில் வாழ்த்துக் குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன,அதில் ஒன்று இப்படி வந்தது ...,
"Without Teachers --days are "Sadday, Moanday,Tearsday, Wasteday, Thirstday, Fightday, Shatterday" so happy TEACHERS DAY!
இன்னொரு குறுந்தகவல்....."Bad teacher complains; Good teacher explains; Better teacher demonstrates, .."Best teacher motivates; Great teacher inspires...HAPPY TEACHER'S DAY ".
குளுவாங் பட்டணத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ரெங்கம், தேசிய வகை தமிழ்ப்பள்ளி சென்றடைந்தேன். நான் அப்பள்ளியில் பணியாற்றும்போது இருந்த முன்னால் மாணவர்கள் ( தற்போது இடைநிலைப் பள்ளியில் பயில்கிறார்கள் ) என்னைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான்.

சக ஆசிரிய நண்பர்களும் சேர்ந்து குசலம் விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின வாழ்த்துக்கள்' தெரிவித்தேன். பிறகு பள்ளி தலைமையாசிரியர் அவர்களைச் சந்தித்து என் வாழ்த்தினைக் கூறினேன். "இன்று ஆசிரியர் தினச்சிறப்பு கூட்டம் இருக்கிறது. தவறால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், வாசு" என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்.

கூட்டத்தின் போது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு. முரளிஅவர்கள், தலைமையாசிரியருக்குப் 'பொன்னாடை' போற்றி சிறப்பு கௌரவிப்பு செய்தார். பள்ளி தலைமையாசிரியரும் குளுவாங் வட்டார தலைமையாசிரியர் மன்றத் தலைவர் உயர்திரு கெ.முனுசாமி அவ்ர்களின் அரிய முயற்சியால் ரெங்கம் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்துடன் கம்பீரமாகத் திகழ்கின்றது. பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அவருக்கு மிகச் சரியான கௌரவிப்பு என்றால் அது மிகையாகாது.

மூத்த ஆசிரியர்கள்( முன்னால் தலைமையாசிரியர்கள்) திருமதி. மகேஸ்வரி ஆசீர்வாதம், திரு. வெங்கடேசன் பிள்ளை, திரு.இராமமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

பி.கு:-மேலே படத்தில்..ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு. கெ.முனுசாமி அவர்களுடன் மூத்த ஆசிரியை ( முன்னால் தலைமையாசிரியர் ) திருமதி மகேஸ்வரி ஆசீர்வாதம் அவர்கள்

1 Comments:

At Sat May 21, 02:16:00 AM 2005, Blogger Vasudevan Letchumanan said...

அன்பர் மூர்த்தி அவர்களே...தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
-எல்.ஏ.வாசுதேவன்

 

Post a Comment

<< Home