.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, January 30, 2005

இறைவா! இதை என்னால் செய்யமுடியுமல்லவா?

( ஸ்வஸ்தி வசனத்தை ஒட்டிய தியானமும், பிரார்த்தனையும் )
முதல் வசனத்தை அடிப்படையாகக் கொண்ட விளக்கவுரை:

இறைவா, நான் இந்த உலகைப் படைக்கவில்லை.
ஆயினும் நான் என்னை இதில் காண்கிறேன். இவ்வுலகில்
எத்தனை எத்தனையோ மக்கள் இருக்கின்றனர்.
அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர் என்பதால்,
அவர்களுடன் எனக்கு ஓர் உறவு இருப்பதை நான்
உணர்கிறேன். இந்த உணர்வின் வெளிப்படையாக
அனைவரையும் வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் என் நல்லுணைவை அனுப்புகிறேன்.

இறைவா! இதை என்னால் செய்யமுடியுமல்லவா?

இவ்வுலகில் அரசியலும், அரசியல்வாதிகளும்
என்னை பயமுறுத்துகின்றன.
ஆயினும், அரசாட்சியை நடத்துபவர்கள் வேண்டும்
என்பதை நான் உணர்கிறேன்.

அரசாள எவரும் இல்லை என்றால், எவ்விதமான
அராஜகம் தலை விரித்தாடும் என்பதை அறிகிறேன்.
ஆனால், தினந்தோறும் பத்திரிகைகளைப்
பார்க்கும்போது என்னால் வருத்தமடைவதைத்
தடுக்க் முடியவில்லையே! நான் என்ன செய்வது?
தேர்தலில் நிற்க நான் தகுந்தவனும் இல்லை,
தயாராகவும் இல்லை.
ஆனால், இறைவா, என்னால் ஒன்று செய்ய முடியும்,
என்னால் பிரார்த்தனை செய்ய முடியும்.

இறைவா! இதை என்னால் செய்யமுடியுமல்லவா?

(குறிப்பு : மேலேயுள்ள விளக்கவுரையானது முதல் ஸ்வஸ்தி வசனத்தின் ஒரு பகுதி மட்டுமே)

நன்றி : ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைக்கட்டி.

2 Comments:

At Sun Jan 30, 09:55:00 PM 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நல்ல பிரார்த்தனை.. நானும் பிரார்திக்கிறேன்

 
At Mon Jan 31, 10:11:00 PM 2005, Blogger Vasudevan Letchumanan said...

மறுமொழிக்கு மிக்க நன்றி!

 

Post a Comment

<< Home