.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, May 21, 2005

'சிந்தனை ஆற்றல்' கொண்ட மாணவர்களை உருவாக்குதல்

தேசிய ரீதியிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் இவ்வாண்டு நீலாய், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் அதிகாரப்பூர்வமாத் தொடக்கி வைத்தார். நாடு முழுவதும் இருந்து சுமார் 4,000 ஆசிரியர்கள் ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டனர்.

'சிந்தனை ஆற்றல்' மிக்க மாணவர்களின் படைப்பாக்கமும் செயல்திறனும் நாட்டிற்கு வருங்காலத்தில் முக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுவதால் அத்தகைய மாணவர்களை உருவாக்கும் சவாலை தற்போது ஆசிரியர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று துணைப் பிரதமர் தமதுரையில் கூறினார்.

ஒரு சிறந்த மாணவனை கல்வி வழி உருவாக்குவது மட்டுமல்ல ஆசிரியரின் பொறுப்பு, மாறாக, எந்த பிரச்னையையும் மதிநுட்பம் கொண்டு சீர்தூக்கிப் பார்த்து ஆழ்ந்த சிந்திக்கும் ஆற்றல் கொண்டு செயல்படுத்தும் வல்லமை பெற்று நாட்டுப்பற்று மிகுந்த குடிமகனாய் உருவாக்கும் கடப்பாட்டையும் ஆசிரியர்கள் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இலக்கை அடைய ஆசிரியர்கள் இவ்வாண்டின் ஆசிரியர் தின கருப்பொருளான " தரமான ஆசிரியர்கள், மேன்மைக்கான வித்துகள்" என்பதை மனதில் சவாலாகக் கொண்டு பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆசிரியர்களே மாணவர்களின் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். சிறந்த மாணவர்களைக் கல்வி கேள்விகளில் திறம்பட உருவாக்குவதில் இதுவரை ஆசிரியர்கள் சிறந்த நற்சேவையாற்றியுள்ளனர் என்று பாரட்டினார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு ஈடாக தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படுகிறது என்றார் துணைப் பிரதமர்.

அந்நிகழ்வில் துணைப் பிரதமர் " ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச பாடப் புத்தகங்கள் இயல்பாகவே வழங்கப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுதும் உள்ள சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மன நிறைவை எற்படுத்துவதாக இருக்கும்.

1 Comments:

At Thu May 26, 12:39:00 PM 2005, Anonymous Anonymous said...

தங்களுடைய கருத்துக்கள் ஏற்புடையதாகவும் சிறப்புடையதாகவும் அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
திரு.ஜெகன்.அ
பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி

 

Post a Comment

<< Home