.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, May 25, 2005

பொது நலச் சேவையில் துன் அமினா தமிழ்ப்பள்ளி முன்னுதாரணம்!



Sumbangan Makanan Kering - Sempena Sambutan Hari Guru Peringkat N.Johor 2005.
SJK(T) Tun Aminah, Skudai, Johor.


ஜொகூர் மாநிலத்திலேயே அதிக மாணவர் எண்ணிக்கையைக் ( 1400 மாணவர்கள் ) கொண்ட தமிழ்ப்பள்ளியாகத் திகழும் துன் அமினா தமிழ்ப்பள்ளி இன்று பள்ளி வரலாற்றில் இடம்பெறத் தகுந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

பேறு குறைந்த மாணவர்களுக்காகவும் மற்றும் சுமார் 8 அனாதை இல்லங்களுக்கும் ( )- உணவுப் பொருட்களைத் திரட்டி சம்பந்தப்பட்ட இயக்கங்களுக்கு வழங்கியிருக்கிறது. போற்றத்தகுந்த இந்நிகழ்வு இன்று காலை ( 25.05.2005 ) அப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி இலாக்கா துணை அதிகாரி உயர்திரு அனாஃவி அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளர் திரு. லக்க்ஷ்மண ராவ் அவர்கள் " முதன் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளி மாநில அளவிலான 'ஆசிரியர் தின' நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக 'சமூக மனப்பான்மையுடன்' இந்நடவடிக்கையை ஏற்று நடத்துகிறது" என்றார். மேலும் அவர், " எங்கள் முயற்சிக்கு ஜொகூர் வட்டாரத்திலுள்ள சுமார் 216 ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகள் துணை வந்தன. தேசிய வகை மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நல்லெண்ண நோக்குடன் சமூக அக்கரையுடன் ஆதரவு நல்கியது உண்மையிலேயே வரவேற்கத்தகுந்தது" என்று கருத்துரைத்தார்.

ஆசிரியர்கள் பணி கற்றல் கற்பித்தலோடு நிறைவு பெறுவதில்லை. பள்ளி சூழலுக்கு அப்பால் சமூக நலன் மற்றும் பொதுச் சேவை மனப்பான்மை - இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் வழி வலுப்படுத்த ஏதுவாகிறது. சிறந்த ஆசிரியர்கள் சீரிய நற்காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 63 ஆசிரியர்களைக் கொண்ட துன் அமினா தமிழ்ப்பள்ளியை தலைமையாசிரியர் திருமிகு. கெ. பூபாலன் பி.ஐ.எஸ் அவர்களின் சீரிய தலைமைத்துவத்தில் இயங்கி வருகிறது.

குறிப்பு: மேலே படத்தில் இடம் இருந்து வலம், ஆசிரியர் திரு சுலைமான் மொய்டீன், திருமிகு கெ. பூபாலன் பி.ஐ.எஸ் ( தலைமையாசிரியர் ), ஆசிரியர் திரு. லக்க்ஷ்மண ராவ்.

2 Comments:

At Thu May 26, 12:44:00 PM 2005, Anonymous Anonymous said...

தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
இவ்வண்ணம்,
திரு. சிவசுப்ரமணியம்
பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி

 
At Fri May 25, 04:20:00 PM 2007, Blogger நமதடா இந்நாடு said...

வாழ்த்துக்கள்!பாராட்டுகள். நாங்கள் சென்னையில் பாவாணர் தமிழ்வழிப்பள்ளி என்னும் பெயரில் பள்ளி நடத்தி வருகிறோம்.

 

Post a Comment

<< Home