.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, May 31, 2005

துன் அமினா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புகள்


சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தமிழ்ப்பள்ளிகளில் கணினிப் பயன்பாடு என்பது நடைமுறையில் இல்லை. அப்படியே இருந்தாலும் அது பள்ளி நிர்வாக நடவடிக்கைக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆயினும் இப்போது பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் கணினிக்கூடங்கள், மையங்கள் தென்படுகின்றன. மாணவர்களுக்கு அடிப்படை கணினி மற்றும் தொழில் நுட்பத்தைப் போதிக்க அரசாங்கமும் சில தமிழ்ப்பள்ளிகளுக்கு கணினி மையங்களை அமைத்திருக்கின்றது. அவ்வப்போது ம.இ.கா தலைவர்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், மற்றும் தமிழ்ப்பற்று மிக்க தொழில் அதிபர்கள் இலவசமாக சில கணினிகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இடம், கணினி வசதி எல்லாம் இருந்தாலும் தகவல் தொழில் நுட்பத்தைப் போதிக்க ஆசிரியர்கள் இல்லை. தன்னார்வம் கொண்ட சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தலைமையாசிரியரின் வழிகாட்டுதலுக்கிணங்க கணினி வகுப்புகளை 'புறப்பாட நடவடிக்கையாக' போதிக்கின்றனர். ஏனெனில், தமிழ்ப்பள்ளிகளுக்காக பிரத்தியேக கணினி பாடத்திட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை!

பள்ளிப் பாட நேரத்திலேயே கணினி வகுப்புகளை - ஆண்டு 1 முதல் 6 வரை - உள்ள மாணவர்களுக்கு நடத்துவது என்பது விவேக முயற்சி! அவ்வாறு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சம்பளமும் வழங்கி வருகின்றது என்பது பாராட்டக்கூடிய ஒன்று. ஜொகூர் மாநிலத்தில் சில தமிழ்ப்பள்ளிகள் இம்முயற்சியில் ஈடுபாடு காட்டுவது வரவேற்கத்தக்கது. அப்பட்டியலில் துன் அமினா தமிழ்ப்பள்ளியும் இடம்பெற்றிருக்கிறது.

அப்பள்ளியின் கணினி மையத்தில் 38 கணினிகள் உள்ளன. பகுதி நேர ஆசிரியர்களாக தற்போது இருவர் பணியாற்றுகின்றனர். வாரத்தில் சராசரி 1 மணி நேரப் பாடமாக ஆண்டு 1 முதல் 6 வரை பள்ளி நேரத்திலேயே போதிக்கப்படுகின்றது. 'சுமார் 5 ஆண்டுகளாக குமாரி வள்ளி என்பவர் கணினி ஆசிரியராகவும் தற்போது ஆசிரியர் ராஜசேகர் சில மாதங்களாக உதவியாகவும் இருக்கின்றார்", என்று அப்பள்ளியின் ஆசிரியர் திரு சுலைமான் அவர்கள் தெரிவித்தார். பெ.ஆ.சங்கத்தின் ஆதரவில் தற்போது சுமார் 8,000 ரிங்கிட் செலவில் கணினி மையம் புதிய தோற்றம் காண ஏற்பாடுகள் செய்து வருவதாக ஆசிரியர் திரு ராஜசேகர் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

<< Home