.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Friday, October 13, 2006

பற்றிவிடு மோனத்தை!

உள்ளும் புறமும் இருளகற்ற
பற்றவை தீபத்தை!
ஒளிரும் நயனம் பரப்பும்
மோன மிச்சத்தை!

நம் இதயம் இருட்டாகிக் கிடப்பதை எப்போது உணர்கிறோம்? எப்போது கடைசியாய் இது பற்றிச் சிந்தித்தோம்? இதில் அறிவு மின்னலாய்ச் சுருங்கிப்போனது. அறிவின் தன்மை பற்று வைப்பதுதானே. அறிவை அறிய முயன்றதுண்டா? வாலறிவு படைத்ததை எதனுடனாவது ஒப்பிடலாகுமா?
நினைத்தது கிடைக்கவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை;கிடைத்ததில் மகிழ்வோம்! மனதை சாட்சி வைப்போம். எது நிரந்தரமோ அதுவே ஆனந்தம்.எது ஆனந்தமோ அது வீடு. இப்போதே விட்டு விடு கவலை முட்டைகளை! தட்டி விடு சுந்தரச் சிந்தையை! அவன் அருளாலெ அவன் தாள் வணங்கு. அறிமுகமாகும் மோனவெளி. இடைவிடாது பற்ற வேண்டியது மோனத்தை மட்டுமே!

0 Comments:

Post a Comment

<< Home