.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, July 05, 2007

மலேசியாவில் புகைமூட்டம்!

படம்: நேற்று காலை 10.00 , அலோர் ஸ்டார்

கடந்த சில நாட்களாகவே இங்கு பெரும்பாலான இடங்களில் சுற்றுச் சூழல் மாசுபட்டிருக்கிறது! சில இடங்களில் சுகாதாரக் கேடு ஏற்படக்கூடிய அளவிற்கு 'காற்று மாசு கணக்கீடு' - Air Pollutant Index (API)அடைந்துள்ளது பலரை வேதனையடையச் செய்துள்ளது.


வடக்கில், கெடா மாநிலத்தில் - சுங்கை பட்டானியில்லும் பினாங்கு மாநிலத்திலும் API அளவு, நேற்று அதிகரித்துள்ளது.


நேற்று வரை சுங்கை பட்டானியில் API அளவு 62 -ல் இருந்து 104-ஐ எட்டியுள்ளது. அலோர் ஸ்டாரில் 51-ல் இருந்து 62க்கு அதிகரித்துள்ளது.


கடந்த செவ்வாய் அன்று லங்காவியில் API கணக்கீடு 55 -ஆக இருந்து நேற்று 61-ஐ எட்டியுள்ளது.


பெர்லிஸ் மாநிலத்திலும் காற்று சுற்றுச் சூழல் மாசுபட்டிருக்கிறது. அங்கு செவ்வாய்க் கிழமை API - 51-ல் இருந்து 54க்கு ஏற்றம் கண்டுள்ளது.


நேற்று காலை மணி 11 வரை பினாங்கு மாநிலத்தில், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம், பிறை மற்றும் செபெராங் ஜெயா ஆகிய இடங்களில் API அளவு முறையே - 65, 74 மற்றும் 91 ஆக இருந்தது.


ஒவ்வொரு முறையும் 'காற்று - சுற்றுச் சூழல் மாசு' ஏற்படும்போது பல காரணங்கள் கூறப்பட்டாலும் ( உதாரணத்திற்கு - இந்தோனேசியா காட்டில் பற்றவைக்கப்படும் தீ ) இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படாதது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.