.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, July 28, 2005

மலர் பேசும் மொழி!


பூவைப் பார்க்கின்றேன் - ஆனால்
பூ தெரியவில்லை.
மகிழ்வு பரப்பும் மனத்தை
நினைவின் இனிமையில் நுகர்கின்றேன்.

பூவே, நீ வெறும் தாளல்ல
தாளினால் வரையப்பட்ட நிழற்படமல்ல.
இருபரிமாணட்டு நீள அகலமல்ல.
நான்காம் பரிமாணத்து நறுமணம்.

காயாகாமல் கனியாகாமல்
மலர்ப் பருவத்துடன் வாழ்வை முடிக்கும்
மணம்தரு மலரே
நீ தியாகத்தின் சின்னம்!

அழகின் உச்சத்தில் மலராகி
ஆன்மாவில் பரப்பும் ஆனந்தம். நீ.
மலர்பேசும் மொழிதான் என்ன?

உன்னைக்கொடு, உலகை உயர்த்து.
அன்பால், தொண்டால் ஜீவனை மலர்த்து!

Monday, July 11, 2005

மனமே..கலக்கமேன் ?


"திறமையில்லா வல்லமை பயனில்லை. திறமைக்கு மன அமைதியும், நிதானமும் தேவை. மனம் கலக்கமோ, பதட்டமோ கொள்ளலாகாது. கடந்த காலத்தை நினைத்து, எதிர்காலத்தை கற்பனை செய்வதால் நம் மனம் பதட்டமடைகிறது. எனவே கடந்த காலத்தை மறந்து, எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படாமல் இருத்தல் வேண்டும். நிகழ்காலத்தைப் பொறுத்தவரை, சோதனையைத் திடமாய் எதிர்த்து, துணிவோடு,சிரசுக்கு மேல் இறைவன், நம்முள் மனம் இருக்கின்றனவென்று எண்ணிச் செயல்பட வேண்டும். தயக்கம் வேண்டாம். மன் ஓர்மையுடன் இறைவனிடம் சரணடைந்து கடமையைத் திறமையுடன் ஆற்றல் வேண்டும். சகலமும் நலமடையும்," என்கிறார் சுவாமி சின்மயானநதா.

சிந்தனை:நம் வாழ்வின் துயருக்கெல்லாம் காரணம் நமக்குள் இருக்கும் கோளாருதான். நம்முள் உள்ள கோளாருகளால் விளையும் துயருக்கெல்லாம் மாற்றம் நம்முள் தான் இருக்கிறது. நம்முள்ளே இருக்கும் கடவுளை உணர்வதுதான் துயர் நீக்க உதவும். நம்முள்ளேயே கடந்து உள்ளதாய், உள்ளிருந்து இயக்குவதாய் உள்ள கடவுள், நம் ஆளுமையிலேயே பதிந்து புதைந்துள்ளது. அது நம்மைக் கிளர்தெழச் செய்ய வல்லது; நம் ஆளுமையை மலரச்செய்வது.

கடவுள் சக்தி நம்முள்ளே இருப்பதை உணர்வது தான் கவலைகளிலிருந்து விடுபடுவதற்கு முதல்வழி!