.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, August 31, 2006

உன்னால்தான் மலேசியா - 49வது தேசிய தினம்



49ஆம் ஆண்டு சுதந்திர நாள் நிறைவு விழா கொண்டாட்டக் காலக் கட்டத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ந்திருக்கும் வேளையில் நாடு அடைந்துள்ள வளர்ச்சியினைக் கண்டு நாம் பெருமிதப்படுவது உண்மை.

மலேசியா பல்லின மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக விளங்கும் அரிய நாடு.

"என்ன வளம் இல்லை, இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்," என்ற பாடல் வரிகள் கூறுவது போல எல்லா வகை வளங்களும் நிறைந்த நாடுதான் நம் மலேசியா.

தேசிய தினச் சிறப்புச் செய்தியில் " நாட்டின் வலிமைக்கு எல்லோரும் இணைவீர்!" என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு நலம்பெறவும், மேலும் வலிமை பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி நேற்று நாட்டு மக்களுக்கு விடுத்த தேசிய தினச் செய்தியில் வலியுறுத்தினார்.

சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவை என்றார் பிரதமர்.

உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும், அரசியல் நிலைத்தன்மையும், பல்லின மக்களின் ஒற்றுமையும், சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

இந்த வேளையில் நாட்டின் தேசிய கோட்பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.

1) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
2) பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
3) அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
4) சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
5) நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

மலேசியர் என பெருமை கொள்வோம்!
உன்னால்தான் மலேசியா!

Friday, August 11, 2006

ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் மன்றத் தலைவர் :
திரு. N.தமிழ்வாணன் ( SMK Skudai, Johor.)

"இம்மாதிரியான கருத்தரங்கின் வழி பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுகிறது. முதல் நிகழ்வாக தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் எவ்வாறு கற்றல் கற்பித்தலை இன்னும் சிறப்பாக நடத்தலாம் என்பதைப் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால், இதுவரை தகவல் தொழில் நுட்பத்தைத் தங்கள் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தாத ஆசிரியர்கள்கூட மிகுந்த ஆர்வத்தோடு காணப்படிகின்றனர்.

அடுத்த நிகழ்வாக, மாணவர்கள் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சியடைய வழிவகை செய்ய பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதன்வழி ஆசிரியர்கள் மேலும் தங்கள் மாணவர்களின் அடைவு நிலையை உயர்த்த முயற்சி எடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதோடு, ஆசிரியர்கள் ஒரு குடும்ப சூழலில் தமது ஆசிரியர் பணி தொடர்பான பல்வேறு உத்திகளையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள இக்கருத்தரங்கு ஒரு களம் அமைத்துக் கொடுத்ததென்றே கூறவேண்டும்.

இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ய எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொண்ட ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் செயற்குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

Thursday, August 10, 2006


ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களுக்கான தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் நேற்று சுமார் 90 தமிழாசிரியர்கள் பங்கெடுத்தனர். மாநில அளவில் நடைபெற்று வரும் இப்பயிலரங்கில் குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களே பங்கெடுக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பெரும்பாலான ஆசிரியர்கள் அடிப்படை தகவல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றிருக்கின்றனர். ஆனாலும் கூட அதைக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துவது மிகக் குறைவு. மாற்றம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றத்திற்கு தமிழாசிரியர்கள் தயாரா ?

Tuesday, August 08, 2006

தகவல் தொழில் நுட்பப் பயிலரங்கு

ஜோகூர் மாநில இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்களுக்கான தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கு இன்று , ஆகஸ்ட் திங்கள் 8-ஆம் நாள் முதல் 11-ஆம் நாள் வரை, மலாக்காவிலுள்ள ஸ்திரேட் மெரீடியன் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் / பயிலரங்கில் மாநிலத்திலுள்ள 90 தமிழாசிரியர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள் என்று மாநில கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு துணை அதிகாரி திரு. விஜயன் இராமசாமி தெரிவித்தார்.

தகவல் தொழில் நுட்பத்தை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தும் முறைமை,
பயிற்றுத் துணைக் கருவிகள் இவற்றோடு கற்பித்தலில் புதிய யுக்திகளையும் அடையாளம் காணும் கருத்தரங்காக அமையும் என்று நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமாகிய திரு.விஜயன் இராமசாமி கூறினார்.

பி.கு: இப்பயிலரங்கில் 'தமிழ் கற்றல் கற்பித்தலில் பல்லூடகத் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு' - (7-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை) மற்றும் 'தகவல் தொழில் நுட்பத்தில் வலைப்பூவும் மின்தமிழும்' எனும் இரண்டு கட்டுரைகள் அடியேன் வழங்க விருக்கின்றேன்.